Saturday, September 5, 2009

கனவு

போர்வைக்குள் மூடி வைத்த
காலாவதியான கனவுகள்
கால ஓட்டத்தில் கரைந்து போன
கதைகள் சொல்லின!
ஆலமரமேயாயினும் நம் தேவை
சில பலகை தான்!
எண்ணச் சிதறலை இழைத்துச் சேர்த்து
மனதை அலங்கரித்தால்
கனவுகளெல்லாம் காவிகளின் இல்லறம் தான்!
நித்திரையில் சுமை எதற்கு?
புல்லின் வேருக்கு நீர் வேண்டும்
குளம் எதற்கு கொள் மனமே!!!

கலைஞனும் ஒரு குழந்தைதான்!

குழந்தையின் கிறுக்கல்கள் ஓவியம்...
பேசும் மழலை கவிதை...
குழந்தை மனம் எவரையும் கலைஞனாக்கும்!!!