Thursday, November 25, 2010

மனம் சொல்வது என்ன?

உள்ளூர மனம் நகைக்கிறது
அவ்வப்போது

விரக்தியின் உச்சத்தில்
உதறிவிட்ட உறவுகள்
செல்ல மறுத்த பயணங்கள்
சொல்ல மறந்த வார்த்தைகள்
பருவத்தே பெறவேண்டிய
சுகமான தருணங்கள்

இழக்கும் முன்னே மீட்பதாய் நினைத்து
தேடுவதைத்தான் இழக்கிறோம்
என்று தெரியாமல்

காலம் கடந்து
இன்னோர் தருணம் வருமா
என ஏங்கும்போது

உள்ளூர மனம் நகைக்கிறது
அவ்வப்போது

Monday, June 28, 2010

என்ன சொல்ல வந்தாய்?

உறவு சொல்லி பழகாமல்
ஊமையாய் வழி மறித்தாய்!!!
எல்லாப் பொழுதிலும்
ஏதேனும் ஒரு பொருளில்
உன் ஞாபகத்தை விதைத்து விட்டாய்!!!
துயில் கொள்ளும் நேரத்தில்
அசரீரியாய் சிரித்து நின்றாய்!!!
தலையணையில் முகம் புதைத்தும்
இமைகளுக்குள் இடம் பெயர்ந்தாய்!!!
அரைத்தூக்கம் கண் நெருங்க
விடியலைத் தொட்டு விட்டேன்!!!
நிலவை ஒதுக்கி விட்டு மீண்டும்
என் நிலவே! உனைக் காண ஓடி வந்தேன்!!!
மனப் புண்ணில் மலர் தடவி
ஒரு அந்நியனை அகதியாக்காதே!!!

கலைஞனும் ஒரு குழந்தைதான்!

குழந்தையின் கிறுக்கல்கள் ஓவியம்...
பேசும் மழலை கவிதை...
குழந்தை மனம் எவரையும் கலைஞனாக்கும்!!!