Monday, June 28, 2010

என்ன சொல்ல வந்தாய்?

உறவு சொல்லி பழகாமல்
ஊமையாய் வழி மறித்தாய்!!!
எல்லாப் பொழுதிலும்
ஏதேனும் ஒரு பொருளில்
உன் ஞாபகத்தை விதைத்து விட்டாய்!!!
துயில் கொள்ளும் நேரத்தில்
அசரீரியாய் சிரித்து நின்றாய்!!!
தலையணையில் முகம் புதைத்தும்
இமைகளுக்குள் இடம் பெயர்ந்தாய்!!!
அரைத்தூக்கம் கண் நெருங்க
விடியலைத் தொட்டு விட்டேன்!!!
நிலவை ஒதுக்கி விட்டு மீண்டும்
என் நிலவே! உனைக் காண ஓடி வந்தேன்!!!
மனப் புண்ணில் மலர் தடவி
ஒரு அந்நியனை அகதியாக்காதே!!!

கலைஞனும் ஒரு குழந்தைதான்!

குழந்தையின் கிறுக்கல்கள் ஓவியம்...
பேசும் மழலை கவிதை...
குழந்தை மனம் எவரையும் கலைஞனாக்கும்!!!