Thursday, November 25, 2010

மனம் சொல்வது என்ன?

உள்ளூர மனம் நகைக்கிறது
அவ்வப்போது

விரக்தியின் உச்சத்தில்
உதறிவிட்ட உறவுகள்
செல்ல மறுத்த பயணங்கள்
சொல்ல மறந்த வார்த்தைகள்
பருவத்தே பெறவேண்டிய
சுகமான தருணங்கள்

இழக்கும் முன்னே மீட்பதாய் நினைத்து
தேடுவதைத்தான் இழக்கிறோம்
என்று தெரியாமல்

காலம் கடந்து
இன்னோர் தருணம் வருமா
என ஏங்கும்போது

உள்ளூர மனம் நகைக்கிறது
அவ்வப்போது

கலைஞனும் ஒரு குழந்தைதான்!

குழந்தையின் கிறுக்கல்கள் ஓவியம்...
பேசும் மழலை கவிதை...
குழந்தை மனம் எவரையும் கலைஞனாக்கும்!!!