Saturday, December 5, 2009

தோழமையே

என் தோழமையே !
மனத்தைக் கேள்! பொய் சொல்லும்!
இதயம் கேள்! மெய் சொல்லும்!
மூளைப் பதிவின் கௌரவ பேரத்தில்
தாய்மையை தவிக்க விடாதே!
இளமைக் காலங்களும்
இதய மோதல்களும்
வாழ்க்கைப் பாதையில்
வழிப்போக்கர்களே!
கண் பேசும்! மனம் பேசும்!
கடந்து செல்ல மறுக்கும்போது
இதயத்தின் குமுறல்
இதழில் தெரியும்!
வென்றால் மலர் என்பதும்
தோற்றால் முள் என்பதும்
காலத்தின் போதை !
நடுநிலையாய் யோசித்தால்
இரண்டுமே நிரந்தரமல்ல!

1 comment:

  1. :))) வென்றால் மலர் என்பதும்
    தோற்றால் முள் என்பதும்
    காலத்தின் போதை ! ///

    nijam thaan....

    ReplyDelete

கலைஞனும் ஒரு குழந்தைதான்!

குழந்தையின் கிறுக்கல்கள் ஓவியம்...
பேசும் மழலை கவிதை...
குழந்தை மனம் எவரையும் கலைஞனாக்கும்!!!