Sunday, February 26, 2012

புரிந்தது உன் நோக்கம்

அர்த்தம் புரியாத போது
விலகிச் சென்றதும்
உன்னைக் கண்டதும்
என்னுள் எழுந்த உறுத்தலும்
எல்லாம் மாயை என்று
நான் நினைத்தது
மெய்யென்றே தோன்றியது!
காதல் திருமணங்கள்
காணும்போதெல்லாம்
என்னுள் உதிர்த்த தைரியம்...
செய்து பார்த்தாலென்ன என்ற
உண்மை மீறிய கற்பனை...
இது சாத்தியம் தானா
என்ற மனப் போராட்டம்...
இல்லையென முடிவு செய்து
நான் கண் துயிலும் வேளை
உன்னிடமிருந்து குறுந்தகவல்!
உடனே பதில் அனுப்பும் உத்வேகத்தில்
என்னிடம் காதலும் இல்லை...
காமமும் இல்லை...
நட்பென்று விலகிக் கொள்ள
நினைக்கவும் இல்லை...
உன்னோடு அளவளாவிய சுகம்...
அது மட்டும் போதுமென்று
நினைபதல்ல...
அவ்வாறே வாழ்கிறேன்!!!

No comments:

Post a Comment

கலைஞனும் ஒரு குழந்தைதான்!

குழந்தையின் கிறுக்கல்கள் ஓவியம்...
பேசும் மழலை கவிதை...
குழந்தை மனம் எவரையும் கலைஞனாக்கும்!!!