Thursday, May 9, 2013

கைகோர்க்க வந்துவிடு!!!

முடிந்தவரை  தேடி விட்டேன்
துயில் கொள்ளும்முன் கண்ணில்
கொண்டபின்  கனவில்
காற்றில் கடைத்தெருவில்
பூவில் புன்னகையில்
கானலில் கண்ணாடியில்
நிலவில் நினைவில்
பிடிபடவில்லை அந்த பூமுகம் !!!
எங்கே இருப்பாளோ
எனக்கெனப் பிறந்தவள்!!!
என் வாழ்க்கைக்குப்  பொருள் தரவே
வருவதெப்போ சொல் தோழி???
தாயன்றி வேறொருத்தி தோள் தேடும்
இந்த சோர்ந்த மனம்
புன்சிரிப்பில் நாள் சிறக்க
பரிசென்ன தருவேனோ!?
உடலாலும் மனதாலும் உனைச் சுமக்க
தோள் மீது ஒரு பல்லக்கு,
உன் விரல் படவே ஏங்கி
மலர்ந்து கிடக்கும் என் பூந்தோட்டம்,
பரிவட்டம் கட்டிவிட்டு
பாதச் சுவடும் பார்த்து நடக்க
என் உடலுக்கும் மனதுக்கும்
புரிதலுக்கே பிறப்பெடுத்து
உரிமையோடு  என்னுயிர் தாங்க
நாளெல்லாம் நான் சேர்த்த
மனக்கழிவுகளை  வீசி விட்டு
என்ன வேண்டும் என்னவளுக்கு
எனச் சிந்திக்கும் பொன்தருணம்

என்று வருவாய்?? எப்போது தருவாய்???
                                   

No comments:

Post a Comment

கலைஞனும் ஒரு குழந்தைதான்!

குழந்தையின் கிறுக்கல்கள் ஓவியம்...
பேசும் மழலை கவிதை...
குழந்தை மனம் எவரையும் கலைஞனாக்கும்!!!