Friday, May 2, 2014

நேற்றும் நாளையும்

வாழும் நிஜத்தில்
சிறு வயது பெரும் கனவு சில
சாதாரணமாய்  வலம் வரும்!
தேடும் கனவில் சில
அசாதாரண இலக்காய்த் தோன்றும்!
 நேற்றும் நாளையும் காற்றாக
இன்று மட்டும் ஏன் பாரமாக?!
காலத்தின் ஓட்டம்...
நிறைவில்லா மனம்...
கரைந்து போன ஓய்வு ...
சிற்றின்பத் தேடல்...
 மெய் பொய்யின் விகிதாசாரம்
மலை மடுவாய் போனதிங்கே!!!
செல்லும் பாதையில்
காணும் பொருளில் எல்லாம்
ஏதோ  ஒன்றை நினைவுபடுத்த,
இலக்கை அடைந்ததாய் மனம்  சிரிக்கும்!!!


No comments:

Post a Comment

கலைஞனும் ஒரு குழந்தைதான்!

குழந்தையின் கிறுக்கல்கள் ஓவியம்...
பேசும் மழலை கவிதை...
குழந்தை மனம் எவரையும் கலைஞனாக்கும்!!!