Tuesday, August 11, 2009

காதல் அழகு

கனவில் டூயட்!
கலைந்தபின் வாழ்த்து
உனக்கு மட்டும்!
என்னடி நியாயம்?!
காதல் சமுத்திரத்தை
மனதில் அணை கட்டினாலும்
கண்ணில் கசிவு வருமே!
உன்னில் ஏனில்லை
அந்த பௌதிக மாற்றம்?
உன்னை வைத்து உருவகப்படுத்திய
மனைவி என்ற பந்தம்
வேறொரு உருவில்
எப்படி பொருந்தும் ?
போலியை அசலாய்
நினைத்து வாழ
காலமெனும் போதை
கண்மறைக்கப் போகிறதோ ?
நகல் வைத்து உறவாடும்
நரக வாழ்க்கை
எனக்கு மட்டும் ஏனடி?!!

3 comments:

  1. //காதல் சமுத்திரத்தை
    மனதில் அணை கட்டினாலும்
    கண்ணில் கசிவு வருமே!
    உன்னில் ஏனில்லை
    அந்த பௌதிக மாற்றம்?//

    //நகல் வைத்து உறவாடும்
    நரக வாழ்க்கை
    எனக்கு மட்டும் ஏனடி?!! //

    நல்லா இருக்கு.... இந்த வரிகள் எனை மிகவும் கவர்ந்தது....

    ReplyDelete
  2. kanavil dooyat! kalainthapin vaalthu unaku mattum ! ennadi neyayam?!.

    //Nagal vaithu uravaadum naraga vaalkai
    Enakum mattum eenadi?!!//

    Unmayana kadhal ethaum purinthukollum nanba...

    ReplyDelete

கலைஞனும் ஒரு குழந்தைதான்!

குழந்தையின் கிறுக்கல்கள் ஓவியம்...
பேசும் மழலை கவிதை...
குழந்தை மனம் எவரையும் கலைஞனாக்கும்!!!