Thursday, July 30, 2009

யாரவள்

நீ சிரிக்கும்போது
சிறகுகள் முளைக்குமோ?!
பறப்பதாய் உணர்ந்தேனே?!
பாராமல் சென்ற போது
என்னுள் தவறென்ன ஆய்ந்தேன்!
உன் கவனம் ஈர்க்க புருவம் தூக்கி
சிந்தனை செய்தேன்!
யாரவள் உனக்கு...
ஏங்குவது எதற்காக...
கேட்டேன் மனதிடம்
ஏளனமாய் சிரித்தது
"உனக்கு தெரியாதா என்ன?!!"

No comments:

Post a Comment

கலைஞனும் ஒரு குழந்தைதான்!

குழந்தையின் கிறுக்கல்கள் ஓவியம்...
பேசும் மழலை கவிதை...
குழந்தை மனம் எவரையும் கலைஞனாக்கும்!!!