Wednesday, July 29, 2009

இறைவனின் எதிரி

இறைவன் படைத்தான்
ஒரு புது உயிரை!
மனிதன் போல உருவம் ;
இயற்கை தந்த அழகு;
இளமை மாறா தோற்றம் ;
பூவைப்போல இதயம்;
வாரிகொடுக்கும் கைகள்;
நல்வழி நடக்கும் கால்கள் ;
கருணை கொண்ட உள்ளம் ;
அன்பு ததும்பும் கண்கள் ;
காற்றை வெல்லும் வேகம் ;
ஆறுதல் தரும் தோள்கள்;
உதவும் எண்ணம் ரத்தம்;
ஆசி வழங்கும் மரபணு;
இத்தனையும் பெற்றதனால்
அவன், அந்த புதியவன்
மனிதனில் உயர்ந்து நின்றான்!
மாந்தரால் கவரப்பட்டான்!
இறைவனையே மறக்க வைத்தான்!
இருக்கும் கோவிலெல்லாம்
இவனே குடிகொண்டான்!
இறைவன் கவலை கொண்டான் ...
புதியவனை திருப்பி அழைத்தான்...
மேற்படி படைப்புகளை நிறுத்தி வைத்தான்...
அதன் பின்பே நிம்மதி பெற்றான்!!!

2 comments:

கலைஞனும் ஒரு குழந்தைதான்!

குழந்தையின் கிறுக்கல்கள் ஓவியம்...
பேசும் மழலை கவிதை...
குழந்தை மனம் எவரையும் கலைஞனாக்கும்!!!