Wednesday, July 29, 2009

தூங்காத இரவொன்றில்...

கண்முன்னே அலைபாயும்
கடந்து போன நிகழ்வுகள்...
தானே சிரிக்கும் உதடுகள்
நடந்து முடிந்த நகைச்சுவை எண்ணி...
பாரம் தாங்கும் இதயம்
செய்து விட்ட தவறுகளுக்கு...
தலையில் அடிக்கும் கைகள்
செய்ய மறந்த காரியத்துக்கு...
காற்றில் கோலமிடும் கைவிரல்கள்
செய்யப்போகும் காரியத்துக்கு...
தூங்கும் முன் ஒரு ஏக்கம்
நேற்று கண்ட கனவு தொடருமா?!!!

No comments:

Post a Comment

கலைஞனும் ஒரு குழந்தைதான்!

குழந்தையின் கிறுக்கல்கள் ஓவியம்...
பேசும் மழலை கவிதை...
குழந்தை மனம் எவரையும் கலைஞனாக்கும்!!!