Friday, July 31, 2009

நெஞ்சம் ஊனமடி

நீ மலரென்று நிரூபிக்க
என்னை வண்டாய் நினைத்தாயோ?
பெண்மையின் பலம்காட்டி
உன்னை சுற்றி வர வைத்தாயோ?
வாழ்க்கைப் பாதையில் பலம் சேர்க்க
பாதி வரை துணைக்கு அழைத்தாயோ?
நீ கடலுடன் சங்கமிக்க
எனை இருகரையாய் வைத்தாயோ?
உன் பெண்மை வாசம் வீச
என் இதய மலரா சூடக் கிடைத்தது?
உன் கள்ள இதயத்தின் மென்மையால்
என் கல்நெஞ்சில் சில நாள் சந்தோஷ ஊற்று!
வழிபோக்கனாய் இருந்த என்னை
உன் வழி பார்க்க வைத்தாயே?!
விடைபெறும் போது கூட
என் மன உளைச்சலுக்கு விடை தரவில்லை!
உன் நெஞ்சம் ஊனமடி கோழைப்பெண்ணே!!!

2 comments:

கலைஞனும் ஒரு குழந்தைதான்!

குழந்தையின் கிறுக்கல்கள் ஓவியம்...
பேசும் மழலை கவிதை...
குழந்தை மனம் எவரையும் கலைஞனாக்கும்!!!