Thursday, July 30, 2009

மாயை

விழி மூடிக் கிடப்பதிலே
சுகம் என்ன கண்டேனோ?!
இமைகளுக்குள் கோட்டை கட்டி
இன்பமாய் துயில்வேனோ?!
நிஜ வாழ்க்கை உண்மைகளை
நீக்கிவிட நினைத்தேனோ ?!
கனவுலகில் வெற்றி மட்டும்
எனும் உண்மை கண்டேனோ?!
போராட நான் மறந்து
பொய் வாழ்க்கை வாழ்வேனோ?!
மாயைகளை ஒதுக்கிவிட்டு
மனிதனாய் மாறேனோ?!!!

No comments:

Post a Comment

கலைஞனும் ஒரு குழந்தைதான்!

குழந்தையின் கிறுக்கல்கள் ஓவியம்...
பேசும் மழலை கவிதை...
குழந்தை மனம் எவரையும் கலைஞனாக்கும்!!!